Saturday, March 10, 2012
Wednesday, March 7, 2012
பெண்ணியம் பேசு!!
பெண்ணியம் பேசு என்கிறாய்!
என்னைப் பற்றி நானே
என்ன பேசுவது என்கிறேன்!
உன்னைப் பற்றிப் பேச
உன்னையன்றி யார் வருவார்?
தாமதிக்காதே பெண்ணே!
தரப்படாத ஒதுக்கீடுகள்,
நிரந்தரப்படாத கெளரவம்,
நித்தம் காயப்படும்
உன் சுயம்!
இது ஏதுமறியாமல்
இருட்டில் இருக்கும்
அந்த சகோதரிக்காகவாவது
பெண்ணியம் பேசு!
உன்-னியம் பேசு என்கிறாய்!
நான் எதைப் பேசுவது?
என் நடை முதல்
உடை வரை
எல்லாவற்றையும் வரையறுத்துவிட்டு,
என் முதல் வரி முதல்
முகவரி வரை
நீயே எழுதி
வாசிக்கச் சொல்லி விட்டு,
என்னைப் பற்றிப் பேசு என்றால்
என்ன நான் பேசுவது?
என் எல்லாமும் ஆனவன்
என என் எல்லாவற்றையும்
நீயே கைப்பற்றிக் கொண்டால்,
எதைக் கொண்டு நான்
என் வாழ்க்கையை வாழ்வது?
கேள்விகள் எழாமல்
பார்த்துக் கொள்கிறாய்
சாமர்த்தியமாய் எப்பொழுதும் போல்!
பாதையோர டீக்கடை முதல்
பாராளுமன்றம் வரை
பரபரப்பாக விவாதிக்கப் படும்
33% இட ஒதுக்கீடு இன்னும்
இவ்வாறாகத்தான் இருக்கின்றது.
காசோலையில் கையெழுத்திடவும்,
சாலை முக்கெங்கும்
வாழ்த்து விளம்பரங்களில்
கணவர்களுடன் கைகூப்பிச் சிரிக்கவும்,
சால்வை போர்த்திக் கொண்டு
விழா மேடைகளில்
புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் என
இட ஒதுக்கீட்டையும்
பெண்ணின ஒதுக்கீட்டையும்
பேணிப் பராமரிக்கிறார்கள்
பெண் ஊராட்சித் தலைவர்கள்!
இடித்துக் கொண்டு நகரும்
பேருந்து சக பயணி முதல்
இருக்கும் ஒரு
மகளிர் பெட்டியையே
பெண்டிருக்கு ஒன்றென்றும்
முதியவர் மற்றும் ஊனமுற்றவர்க்கு
மற்றொன்று என்றும்
இரு பெட்டிகளாக்கி
இருமாப்புடன் வரும்
புகைவண்டி அலுவலர் வரை
எல்லோரும் தான் தருகிறார்கள்
பெண்ணுக்கான தனி மரியாதை!
பொருமல்களுக்கும்
பொருளாதார நெருக்கடிக்கும்
அலுவலகத்துக்கும்
அடுப்படிக்கும்
கண்களால் காவு வாங்கும்
காமுகக் கணவான்களுக்கும்
கையெழுத்திட மட்டும்
கற்றுக் கொடுக்கப்படும்
கல்வி உரிமைக்கும் என
எதற்கும் தெளிவான தீர்வில்லாமல்
எதற்கு இந்த மகளிர் தின கொண்டாட்டங்கள்!
சுதந்திரம் போல்
இதுவும் அரசியலே! அறிக!
பெண்ணியம் பேசி
உன்னை நீயே
ஏமாற்றிக் கொள்ளாதே!
பெண்ணே யோசி!
கண்ணைத் திற!
உன்னை உணர்!
பெண்ணாய் வாழ்!
மகிழ்வாய் இருக்கும்
ஒவ்வொரு தினமும்
மகளிர் தினமே!
Saturday, March 3, 2012
அவசர அதிகாலை!
அலுவலகம் அப்படியே
அசையாமல் மனதிற்குள்
வாரம் முடிவதாய் நினைவில்லை!
தென்றலுடன் நானும்
புன்முறுவலுடன் கடக்கிறேன்
கோழி பிடிக்கும் சிறுவர்களை;
கோலி அடிக்கும் சிறுவர்களை;
கேண்டீஸ், குக்கீஸ் என்ற
என் பாசாங்குகளைப் புறந்தள்ளி
குச்சி மிட்டாயோ, குருவி பிஸ்கட்டோ,
மெய்மறந்து ரசித்து ருசிக்கும் சிறுவர்களை;
இது சிறுவர்களுக்கான உலகம்.
புன்முறுவலுடன் எழுகிறது பெருமூச்சும்.
தலை சிலுப்பித் திரும்புகையில்
இலையெல்லாம் உதிர்ந்த பின்னும்
கிளைகள் முழுக்க பூத்திருக்கும்
கிளைரிசிடியா மரம் சொல்லாமல் சொல்கிறது!
சிறுவர்களுக்கு மட்டுமல்ல;
விழி திறந்து பார்!
மகிழ்ச்சியாய் மலர்ச்சியாய்
எல்லோருக்குமான உலகம்
இங்கேயே தான் இருக்கின்றது!
HAPPY MORNING!!!!!
Thursday, March 1, 2012
Finally, Finally, Finally, Eurekha! கண்டுபிடிச்சிட்டேன்! Its from Sathish Chakravathy’s Leelai. I’m following this song. Otherwise, This song is following me continuously for the past few months. சந்திக்காத கண்களில் இன்பங்கள் பாடல் கேட்கத் தொடங்கிய சமயத்தில் அல்லது அதற்கு சற்று முன்பே கூட இந்தப் பாடல் எனக்கு அறிமுகமாகி ஈர்க்கத் தொடங்கியது. என்ன படம்! என்ன படம்! என்ன படம்! ம்ஹூம்! NO GUESSES. ஒரு வழியாக சந்திக்காத இன்பங்கள் BELONGS TO “ 180” என்றறிந்த பின்னும், NO CLUES ON THIS PARITICULAR SONG. இதோ இன்றைக்கு இன்றைக்கு இன்றைக்குத்தான் கண்டுபிடித்தேன், ITS FROM LEELAI என்று!. AWESOME SONG. ஆனால் இந்தப் பாடலை….. எனக்கு எப்படிப் பிடித்தது? மில்லியன் டாலர் கேள்வி! அந்தப் பாடல்……..
சில்லென்று ஒரு கலவரம்
நெஞ்சுக்குள் இந்த நிலவரம்
பெண்ணென்று ஒரு புயல் வரும் நேரம்
காதல் ஒரு புறம் கண்ணாலே
காய்ச்சல் ஒரு புறம்- என்னில்
மோதல் தரும் சுகம் ஆரம்பம்
தூறலின் சாரலில் நான் நின்ற போது
வானவில் ஓவியம் நான் கண்டதுண்டு
கண்கள் தரும் வண்ணங்கள்
என்னுள் எழும் எண்ணங்கள்
நான் உறைந்து போனேன் இன்று
சில்லென்று ....
"சாலையில் டிராபிக் -இல் நான் வாடும் போது
FM-இல் பாடல்கள் தான் கேட்பதுண்டு
நான் உன்னை கண்ட பின் என்னுள் எழும்
புது பாடல்கள் ஓராயிரம்
எனை மறந்து நின்றேன் இன்று"
சில்லென்று . ...
உன்னை நான் பார்த்த நொடியிலே
என் கண்ணில் யுத்தம் எடுத்ததே
உயிர் மூச்சில் அமைதி பூத்ததே
ஏன் ஏன் ஏன் ஏன் ?
என் கண்ணில் கோடி சூரியன்
என் வானில் கோடை கார் முகில்
என் நெஞ்சில் வீசும் தென்றல் ஆனாய்!
நெஞ்சுக்குள் இந்த நிலவரம்
பெண்ணென்று ஒரு புயல் வரும் நேரம்
காதல் ஒரு புறம் கண்ணாலே
காய்ச்சல் ஒரு புறம்- என்னில்
மோதல் தரும் சுகம் ஆரம்பம்
தூறலின் சாரலில் நான் நின்ற போது
வானவில் ஓவியம் நான் கண்டதுண்டு
கண்கள் தரும் வண்ணங்கள்
என்னுள் எழும் எண்ணங்கள்
நான் உறைந்து போனேன் இன்று
சில்லென்று ....
"சாலையில் டிராபிக் -இல் நான் வாடும் போது
FM-இல் பாடல்கள் தான் கேட்பதுண்டு
நான் உன்னை கண்ட பின் என்னுள் எழும்
புது பாடல்கள் ஓராயிரம்
எனை மறந்து நின்றேன் இன்று"
சில்லென்று . ...
உன்னை நான் பார்த்த நொடியிலே
என் கண்ணில் யுத்தம் எடுத்ததே
உயிர் மூச்சில் அமைதி பூத்ததே
ஏன் ஏன் ஏன் ஏன் ?
என் கண்ணில் கோடி சூரியன்
என் வானில் கோடை கார் முகில்
என் நெஞ்சில் வீசும் தென்றல் ஆனாய்!
சில்லென்று ஒரு கலவரம்
நெஞ்சுக்குள் இந்த நிலவரம்
பெண்ணென்று ஒரு புயல் வரும் நேரம்
காதல் ஒரு புறம் கண்ணாலே
காய்ச்சல் ஒரு புறம்- என்னில்
மோதல் தரும் சுகம் ஆரம்பம்…………
நெஞ்சுக்குள் இந்த நிலவரம்
பெண்ணென்று ஒரு புயல் வரும் நேரம்
காதல் ஒரு புறம் கண்ணாலே
காய்ச்சல் ஒரு புறம்- என்னில்
மோதல் தரும் சுகம் ஆரம்பம்…………
Subscribe to:
Posts (Atom)










.jpg)

