Monday, March 17, 2014

குக்கூ என பெயரிட்டதற்காக thank you Raju Murugan!!!!

கண் பார்வையற்ற இருவரின் காதலுக்கு, குரலால், உணர்வால் மட்டுமே காதலை உணர மற்றும் பகிரக் கூடிய இருவரின் காதல் கதைக்கு, அழகிய கண்களுடைய குயிலின் மொழியைப் பெயராய் சூட்டியிருப்பதற்கு நன்றி! தன் கருத்த தேகத்தை அடர்ந்த இலைகளுக்குள்ளும் கிளைகளுக்குள்ளும் புதர்களுக்குள்ளும் ஒளித்துக் கொண்டு தன் தனித்தன்மையுடனான குரலால் தன் இணைப்பறவையுடன் தன்னை இணைத்துக் கொள்ளும் குயிலின் மொழியை, இரைச்சலான, எல்லாவற்றையும் கடைவிரித்துப் பார்க்கும் ஒரு உலகில் ஒடுங்கி ஒதுங்கி ஓரமாய் ஆனால் விட்டுக் கொடுக்காத தைரியமான தமக்கான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் இருவரின் வாழ்க்கையைச் சொல்ல ஒரு குறியீடாய் பயன்படுத்தியதற்கு நன்றி! பாரதியைப் படித்த, பாரதியைப் பிடித்த எவருக்கும் குயில் தோப்பையும் குயில் பாட்டையும் பிடிப்பது ஒன்றும் புதிதல்ல, வியப்புக்குரியதும் அல்ல!  ஆகவே பாரதிக்காகவும் எனக்காகவும் தங்கள் முதல் படைப்புக்கு குக்கூ என பெயர் சூட்டியதற்கு நன்றி! குக்கூ வெற்றி பெற வாழ்த்துக்கள்!

Wednesday, March 12, 2014

எண்ணற்ற நாட்கள்;
ஏதேதோ சுமை;
என் தோள்களின் வலியை
எங்கே இறக்கி விட நான்?
உன்னைத் தான் கேட்கிறேன்
எங்கே இருக்கிறாய்
எல்லோருக்குமான என் இறைவா?

வார்த்தைகள் வற்றிக் கொண்டே இருக்கின்றன;
வாழ்க்கையும் கூட எனத் தோன்றுகிறது.
நீண்ட பாதையின்
நிழலற்ற பயணத்தில்
நல்லது நினைத்தவர்
நடக்க முடியாமல் வதைபட,
தீமை செய்வோரும்
தீயதை நினைப்போரும்
கொண்டாடிக் களித்திருப்பது
எங்ஙனம் சாத்தியம்?

சோதித்தது போதும்;
சோர்ந்துவிட்டேன் பெருமானே!
என் அன்னையே!
என் தந்தையே!
என் குருவே!
எல்லாமான பரம்பொருளே!
என்னை மீட்கும் வழி
யாதென நீயே அறிவாய்!

இரங்குவாய் இறைவா!



Saturday, March 1, 2014

When Tea itself is not my beverage, where is the question of whether it is my cup of Tea or not??? Sounds too philosophical ah!!!!!

Friday, February 28, 2014

To dream of being frightened by a big dog is a sign of victory and overcoming obstacles. It means you will start rebelling against all those things that have proved to be negative in your life and will start making great improvements to rise above the ignorance surrounding you.

Thursday, February 27, 2014

Sunday, February 23, 2014

Couldn't stop remembering the Best Dinner  time I ever had....on 23.02.1999

@ G.B.Pant University, Pant Nagar


Tuesday, February 11, 2014

உலகெலாம் உணர்ந்து ஓதுதற்கரியவனை
உணர்ந்து ஓங்காரத்தைத் தழுவும் நாளும்
யுவனுக்கு வெகு தொலைவில் இல்லை!

தாயை விட்டு முதல் முறையாகப் பிரிந்து கல்லூரிக்குக் கற்கச் செல்பவன், திருவிழாவில் தொலைந்த பதற்ற மனநிலையில், பற்று கோலின்றி, தோழியிடமோ காதலியிடமோ தாயைத் தேடி ஒட்டிக் கொள்வது போலத்தான் இதுவும். ஒன்றரை வருட காலமாக இஸ்லாம் மார்க்கத்தை நோக்கி தன் மனம் திரும்பியிருப்பதாகக் கூறும் யுவன், இதையும் வெகு விரைவில் புரிந்து கொள்வார். தொடர்ச்சியான கனவுகளுக்கும் குழப்ப மனநிலைக்கும் காரணம் பிறிதொரு மார்க்கத்தின் மீதான தேடலல்ல; திருமதி. ஜீவாவின் பிரிவைத் தாங்கிக் கொள்ள முடியாத, இதைச் சரியாகப் பகிர்ந்து கொள்ள முடியாத சிறு பிள்ளையின் தேடலே என்பதை வெகு விரையில் நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள் யுவன். இசை உங்களை மீட்டெடுக்கும்;  இசையின் இறைவன் உங்களை ஆசிர்வதிப்பார். 

பாதை ரொம்பப் நீண்டது;
பயணம் சிறியது;
யாத்திரை ஓயாதது;
நாம் செல்லும் முடிவைப் பொறுத்தது.
தூரம் காட்டும் விளக்கொளி
காட்டிச் செல்லும் நம்வழி;
நாளைக் காலைப் பொழுது காட்டும்
நமக்கும் நல்வழி......................!

இதுவும் கடந்து போகும்!
பயணங்கள் முடிவதில்லை!