Monday, October 31, 2011

Feverish. No Probs. I'm fine n alright. N.....................I'm Alright. Thank you God for giving me the strength to handle things strong n smooth n to support my people cross the turbulence smoothly  to some extent. Its Review meeting day after tomorrow. Have to Get ready. Going to Sleep listening to Andhi Mazhai Pozhigirathu......Love you SPB Sir, for the Great Song. Salutes Raja Sir, for the Great Composition. Good Night People.

இதுவும்
கடந்து
போகும்….

Saturday, October 29, 2011

God! Give me Strength  Physically n mentally. Be with me. I Need You Now.


என்ன குறையோ?
என்ன நிறையோ?
எதற்கும்
நான் உண்டென்பான்
கண்ணன்.
என்ன தவறோ?
என்ன சரியோ?
எதற்கும்
நான் உண்டென்பான்
கண்ணன்.
என்ன வினையோ?
என்ன விடையோ?
அதற்கும்
நான் உண்டென்பான்
கண்ணன்.

நன்றும் வரலாம்
தீதும் வரலாம்
நண்பன் போலே
கண்ணன் வருவான்.
வலியும் வரலாம்;
வாட்டம் வரலாம்;
வருடும் விரலாய்
கண்ணன் வருவான்!
நேர் கோடு
வட்டம் ஆகலாம்;
நிழல் கூட
விட்டுப் போகலாம்;
தாளாத துன்பம் நேர்கையில்
தாயாக கண்ணன் மாறுவான்.
அவன் வருவான்
கண்ணில் மழை துடைப்பான்;
இருள் வழிகளிலே
புது ஒளி விதைப்பான்.
அந்த கண்ணனை,
அழகு மன்னனை,
தினம் பாடி வா மனமே!

உண்டு எனலாம்;
இல்லை எனலாம்;
இரண்டும் கேட்டு
கண்ணன் சிரிப்பான்!
இணைந்து வரலாம்;
பிரிந்தும் தரலாம்;
உறவைப் போலே
கண்ணன் இருப்பான்!
பனி மூட்டம்
மலையை மூடலாம்;
வழி கேட்டுப்
பறவை வாடலாம்;
புதிரான கேள்வி யாவிலும்
விடையாக கண்ணன் மாறுவான்.
ஒளிந்திருப்பான்
எங்கும் நிறைந்திருப்பான்
அவன் இசை மழையாய்
உலகினை நனைப்பான்.
அந்த கண்ணனை,
கனிவு மன்னனை,
தினம் பாடி வா மனமே!

Thursday, October 27, 2011

கண்ணே! நவமணியே! உன்னைக் காணாமல் கண்ணுறங்குமோ? எப்பொழுது கேட்டாலும் கண்களைக் கசிய வைக்கும் ஒரு பாடல். பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கையில் சிந்தனை சிலநேரம் சிதறிப் போவதுண்டு. எனினும் எனினும் ஒவ்வொரு முறையும் நான் தவிர்க்க நினைக்கும் அந்த LAST STANZA கடைசி சரணம் வருகையில் மட்டும் மணம் ALERT ஆகி கண்களும் நெஞ்சமும் கணக்க என்னை ஈர்த்து விடுவதை தவிர்க்கவே முடியாமல் போவது எவ்வாறு என்பது மட்டும் MILLION DOLLAR QUESTION. என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு..

Tuesday, October 25, 2011

HAPPY DEEPAVALI


இன்றே தொடங்கிவிட்டது தீபாவளி. சுற்றிலும் பட்டாசு சத்தம். மழை விடிவதற்காய் கைகளில் பட்டாசுகளுடன் காத்திருந்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன, யார் முதலில் வெளியில் சென்று பட்டாசு வெடிப்பது என்ற போட்டியில், தம்பி கையில் இருந்த கம்பி மத்தாப்பு என் கையை பதம் பார்த்தது அந்த சிறு வயதில் வலித்தபோதும், என் கைகளில் மாறாத வடு, மனதிற்குள் மழலைக் காலத்தின் மகிழ்ச்சித் தருணங்களை நூறு மடங்கு மகிழ்ச்சியுடன் ஞாபகப்படுத்துகிறது. THANKS DA SRIDHAR FOR BEING A GREAT BROTHER. தாத்தா எண்ணெய் தேய்த்து விட்டது, அம்மா சீயக்காய் தேய்த்து விட்டதும், அப்பா கை பிடித்து பட்டாசு வெடித்ததும், அண்ணன் தம்பியுடன் அமர்ந்து தீபாவளி விருந்துண்டதும், அக்கம்பக்கத்தாருடன் பலகாரங்கள் பரிமாறியதும், தூறும் மழையில் பட்டாசு, பலகாரங்களுடன் ஊருக்குப் பயணப்பட்டதும், சொந்த பந்தங்களுடன் மாலையில் தீபாவளி கொண்டாடியதும், பெரியப்பாக்கள், அத்தைகள் கொடுத்த ஒற்றை ரூபாய் பரிசுடன் பேருந்தில் ஊர் திரும்பியதும், தீபாவளி எவ்வளவு சந்தோக்ஷமானது? தீபாவளிகள் தொடரட்டும் எல்லோர் மனதிலும் மகிழ்ச்சியின் மழையுடன். HAPPY DEEPAVALI.