மார்கழி 6
முல்லை பூத்துவிட்டது!
மூடு பனி களைத்துவிட்டது!
முகில் வதனா! முகுந்தா!
முழுநிலவே! விழித்தெழுவாய்!
முன்னெழு பிறவியிலும்
உன்னைப் பிரிய இயலாமல்
தேவகி ஆனேன் நான்!
யசோதையும் ஆனேன் நான்!
ராதை ஆனேன் நான்!
கோதையும் ஆனேன் நான்!
யாதுமாகி நிற்பவனே!
உன் யாதுமாகி
உடன் வருவேன் நான்!
அரங்கனே!
அழகம்பெருமானே!
உன்
ஆண்டாளும் நானே!
ஆட்கொள்ளும் நேரமிது!
அழகு விழி திறந்தருள்வாய்!
என் பாவை # 6
No comments:
Post a Comment