திருப்பாவை பாசுரம் 21
ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
ஊற்றமுடையாய்! பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன் வாசற்கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமாபோலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்
ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
ஊற்றமுடையாய்! பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன் வாசற்கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமாபோலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்
எம் பாவை 21
காலை விடியுதிங்கே! கதிர்மதியம் விரியுதிங்கே!
சாலை வழியிலெல்லாம் உன் சங்கநாதம் கேட்குதிங்கே!
ஞாலம் உனைத் தொழுதே நற்கதி எய்துதிங்கே!
நாளைப் போதெதற்கு இன்றேயெனக் கருள்வாயே என்றுன்
தாள் பணிந்தேன்! தாமோதரா! தளிர் விழிகள் திறந்தெழுவாய்!
பாலை துளிர்த்திடவே பாலமுதம் சொரிந்திடவே
மானமுகில் பொழிந்திடவே மாலவனே கண்திறவாய்!
யாவும் நீயே என்றே யாம் உன் சரணானோம்!
ராகமலர் கொண்டு பாக்கள் பல புனைந்தோம்;
லாவகமாய் துயரம் நீக்கி நன்மாற்றமே நல்கிடுவாய்!
வானக் கொடை போலே என் அகம் காத்திடவே
வந்தருளும் நேரமிது! வரதனே! கண் மலர்வாய்!
என்றென் எண்ணமெல்லாம் இப்போதே எடுத்துரைத்து
கண்ணனை எழுப்பிடவே கிளம்பேலோர் எம் பாவாய்!
-காஞ்சனா
No comments:
Post a Comment