Thursday, January 1, 2015

திருப்பாவை பாசுரம் 17
அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
     எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே
     எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகளந்த
     உம்பர் கோமானே! உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா
     உம்பியும் நீயும் உறங்கேல் ஓர் எம்பாவாய்

எம் பாவை 17

அன்பின் பேரொளியே! அரசர்க்கெல்லாம் அரசே!
ஆனந்தக் கண்ணா! ஆலிலை மன்னா!
இன்குழலுக் குரியோனே! இச்சகம் காப்பவனே!
ஈன்ற தந்தையே! ஈரன்னை மைந்தனே!
உயிரே! உணர்வே! உடையே! உலகே!
ஊனே! ஊற்றே! உன்னைச் சரணடைந்தேன்!
எல்லையில்லாதவனே! என்னைக் காத்தருள்வாய்!
ஏழைப் பங்காளனே! ஏழுமலையானே!
ஐம்பூதத்துக்கு அதிபதியே!
ஒப்பிலாதவனே! ஒளியின் ஒளியே!
ஓர் வார்த்தை சொல்லிடுவாய்!
நல்வார்த்தை சொல்லிடுவாய்!
என நித்தம் பணிந்திட்டேன்!
ஏனோ நீ இன்னும் இரங்கவில்லை!
நீ என்னிடம் பேசவில்லையெனில் 
நான் உன்னைத் தவிர வேறு 
யாரிடமும் பேசுவதாய் இல்லை!
என்ன பிடிவாதம் இது?
எழுந்தருள்வாய் கண்ணா! 
என்னைக் காக்கும் நேரமிது!
கொஞ்சம் இரங்கி வா!
என்றே அவனிடத்தில் என்னிலையை
எடுத்துரைப்பீர் எம்பாவாய்!
-காஞ்சனா

No comments:

Post a Comment