Sunday, July 19, 2015

Seeing all that is happening around,
Seeing all the torment;
Telling to my Heart n mind!
For once n again n again....
Its blessed to be Single!!!
No Commitments;
No Tears;
No Hurts;
No Pain;
No expectations;
No Need of Secret Talks;
No Need of Restless Walks;
No Need of Prolonged fights;
No Need of High decibel Quarrels;
No Need of Hungerless hours;
No Need of Sleepless nights;
No Need of meaningless dreams;
Don't Ever Fall in Love!!!
Never!!!!! Never!!! Never!!!!

விழித்தெழுகையில் செவிகளில்
விடிகிறது உன் குரல்;
வெளியில் வந்து விடாதேயென
விழிகளுக்குள் விரட்டிப் பிடிக்கிறேன்
உன் கனவுகளை!

அடர்த்தியாய் தொடர்ந்த என்
இரண்டாம் தூக்கத்தில்
அடம்பிடித்து வந்தமர்ந்த உன்
முரண் கனவுகளை
புன்னகையாய் மொழிபெயர்த்துத் தருகிறது
என் தலைக்கு மேல்
அசைந்து கொண்டிருக்கும்
உன் மயிலிறகு!

எஞ்சியிருக்கும் உறக்கத்தை
கொஞ்சம் கொஞ்சமாய்
துடைத்தெடுக்கையில் எங்கிருந்தோ
தஞ்சம் கேட்கிறது ஒரு
ஏகாந்த குயிலோசை!
குரலில் வழிவது குயிலோ?
உன் குழலோ? என்பது
கண்ணா! உனக்கே வெளிச்சம்!

புரியாத உன் மெளனங்களை
மொழிபெயர்க்கும் வழி தெரியாமல்
விடியலுக்குள் நுழைகிறேன்!
மொழி தேவையற்ற புன்சிரிப்பொன்றை
மென்மையாய் தெளிக்கும்
எதிர் சாளர பெண்மணியிடம்
எதிர்பாராமல் புரிபடுகிறது
எனக்கான உன் நேசம்!

நீ தெளித்த நம்பிக்கையில்
நீர் தெளிக்கும் முகில்களுடன்
வெளிச்சமாய் என் நாள்
விடிந்தே விட்டது!

Tuesday, July 14, 2015


மூன்றாண்டுகள் முழுதாய் ஓடிவிட்டதை
மூளை நம்ப மறுக்கிறது!
எங்களுடன் நீ இல்லை என்பதை
எப்படி நாங்கள் நம்புவது?

எம் பெற்றோருக்கு நன்மகனாய்;
சகோதரருக்கு நற்றோழனாய்;
எனக்கும் நற்சகோதரனாய்;
எமக்கு எல்லாமாய் இருந்தாய்;
எப்போதும் இருப்பேன் எனத்தான்
எப்போதும் சொன்னாய்!

எம் இல்லத்தின் காவலனாய்
எம் தேவைகளுக்குச் சேவகனாய்
எம் சுமைகள் யாவையும்
எவ்வாறும் சுமந்து சிரிக்கும்
எல்லாமும் ஆன இறைவனாய்
நீ இருந்த வரை…
சுமைகள் சுமைகளாய் தெரியவில்லை!
இப்பொழுதன்றோ உணர்கிறோம்
இறையெனப்படுவது யாதென்பதை!

நீ இல்லாத இந்த
நீண்ட மூன்று ஆண்டுகளிலும்
உன்னை நினைக்காத நாளில்லை!
பெரிதாய் ஒன்றும் மாற்றமில்லை;
நீ விட்டுச் சென்ற வீடு
அப்படியேதான் இருக்கிறது!
நீங்காத உன் நினைவுகளுடன்
நாங்கள்தான் உனக்காக
நித்தம் அழுது கொண்டிருக்கிறோம்!
நீ சென்றிருக்கக் கூடாது சகோதரா!

நிறைய வளங்களுடன் வாழ்க்கை முழுவதும்
நிறைந்த மகிழ்ச்சியுடன்
நிறைவாக வாழ ஆசைப்பட்டவன்
நீ என்பது எமக்குத் தெரியும்!
எது நிகழ்ந்திருப்பினும்
நீ சென்றிருக்கக் கூடாது சகோதரா!

இந்தக் கண்ணீர் உன்
பாதங்களைச் சேரும் என்ற
நம்பிக்கையுடன் எழுதுகிறேன்!
ஏன் நீ சென்றாய்
என்பது இன்று வரை
புரியாத புதிராய்
விடையற்ற வினாவாய்
ஈர மரத்தின் கரையானாய்
அரித்துக் கொண்டேயிருக்கிறது!
மறக்க முடியாமல்
மருகிக் கொண்டிருக்கிறோம்!

எப்பொழுதும் நான் உம்முடன் இருப்பேன்
என்ற உன் வாக்கு
பொய்யாதல் சாத்தியமோ?
இப்பொழுது இக்கணத்தின் துயரத்தின்
இணையற்ற அடர்த்தியை
எங்கோ இருந்து நீ
பார்த்துக் கொண்டிருப்பாய்தானே!

எம் வீட்டின் எல்லா இடங்களிலும்
எம் வாழ்வின் எல்லா தளங்களிலும்
எம் நாட்களின் எல்லா நொடிகளிலும்
எம்முடனே நீ இருக்கிறாய்
என்றே நாங்கள் நம்பிக்கொண்டிருக்கிறோம்!

எம் நம்பிக்கையை, பலங்களை
எடுத்துக் கொண்டுவிட்ட இந்த நாளை
மறக்கத்தான் நினைக்கிறோம்!
அஞ்சாதே! உங்களுடன் நானிருக்கிறேன்!
எனும் உன் குரல்
எங்கிருந்தோ ஒலிக்கிறது!

எம்மோடு,
எமக்காக,
எம்முள்,
எம்முடன்,
எப்போதும்,
எங்கும்
நீ இருக்கிறாய் என்ற
நித்திய நம்பிக்கையுடன் தான்
இந்த வாழ்க்கையைத் தொடர்கிறோம்!!!!
MISS YOU PALANI!!!!
REMEMBERING 14.07,2012!
MAY YOUR SOUL REST IN PEACE!!!!!!!!!!!!!




எந்த மலரிலும் உன் வாசம்;
எந்த அலையிலும் உன் ஸ்பரிசம்;
எங்கே நீயென எங்கும்
தேடி அலைகையில்
இங்கே உன்னில் உன்னிடத்தில்தான்
இருக்கிறேன்- எப்போதும் முப்போதும்
இப்போதும் கூட என்று
ஒரு முறை சொல்லிவிடு கண்ணா!
சிறிதளவு சுவாசம் கொள்கிறேன்!

பிரிவுச் சிலுவைதனை எனைச்
சுமக்க விட்டு விட்டு
விரிவாய் என்ன விதண்டாவாதம்?
விந்தைகள் போதும் இனி,
கொஞ்சம் மெளனம் கலைத்துவிட்டு என்
சிந்தைக்குள் வந்து ஓய்வெடு
எனும் என் குரல் கேட்கிறதா?
மந்திரக்காரனே! மாயவா! மாதவா!
எந்தன் மூச்சில் நீ இருக்கையில்
எங்ஙனம் உன்னைப் பிரிவேன் என்று
மட்டுமாவது என் காதில் சொல்லிவிடு!
சிறிதளவு சுவாசம் கொள்கிறேன்!

எந்த புல்லிலும் உன் குழலோசை;
எந்த சொல்லிலும் உன் குரலோசை;
கல்லிலும் காரிருளிலும் உன்னைக்
காண்பது கனவல்ல- இந்தக் கனம்
நிஜமே என்று மட்டுமாவது
சொல்லி விடு கண்ணா!
மூச்சு முட்டும் கணத்திலும்
முகம் மறந்து நிற்கும்
மூர்ச்சைப் பொழுதினிலும்
நிச்சயம் நீ வருவாய் என
நித்தம் காத்திருக்கும் கண்களுக்கு
சிறிதளவு உறக்கம் தருகிறேன்!
சிறித்ளவு உலகம் தருகிறேன்;
சிறிதளவு சுவாசம் தருகிறேன்!
என்னுடன் நீ இருக்கிறாய்
என்று ஒற்றை வரி சொல்லிவிடு!
காத்திருக்கிறேன் கண்ணா !
கண்களில் உனக்கான
கனவுகளுடனும், கவிதைகளுடனும்
நான்
காஞ்சனா……….

Tuesday, May 19, 2015


தின்றவன் திருடனாகி
சிறையிலிருந்து சிறகு
விரித்து விட்டான்;
கொன்றவன், கொற்றவன்
கொள்ள இருந்தவன்
யாவரும் யாரோவாகி
எங்கோ பார்த்துச் சென்றனர்!
வெந்து வெந்து
வேதனையில் நொந்து
வாழ்க்கை படுத்துவிட
படுக்கையே வாழ்க்கையாகி உயிர்
பிடித்துக் கிடந்தவள்,
இந்த நாட்டின் மீதான
இதயத்தின் சினத்தைக்
குறைத்துக் கொள்ளாமலே
விடை பெற்றுக் கொண்டாள்!
அன்பிற்கினிய அருணா!
அத்தனை இந்தியப் பெண்களுக்கும்
உன் வாழ்க்கையையே
உன் வார்த்தைகளாய்
விட்டுச் சென்றவளே!
ஒரு மகளிர் மசோதாவைக் கூட
ஒருமனதாக நிறைவேற்ற
மனமற்ற மக்கள் பிரதிநிதிகள்
ஆளும் இந்த நாட்டில்
மானத்தோடு மகளிர் வாழ்வதுதான்
ஆகப்பெரிய சாதனையாக இருக்க வேண்டும்!
எனில் நேர்மைக்காகப் போராடி
எல்லாம் இழந்து இன்று
இந்த மண்ணிலிருந்து
இடம் பெயர்ந்த தேவதையே!
போராடியது போதும்;
நிம்மதி கொள்!
உன் யுத்தத்தை
உற்சாகமாய் நாங்கள் தொடர்வோம்!
அப்புறம் ஒன்று!
இந்த நாட்டிற்கென
ஏதேனும் செய்யாமல்
செல்கிறோமே என்று
வேதனை இருந்தால்
விட்டெறி சகோதரி!
நாய்களும் நரிகளும்
மனிதர் போர்வையில்
சுதந்திரமாக உலவும்
இந்த நாடு நலமாக
இருந்தால் என்ன?

நாசமாகப் போனால்தான் என்ன?
Aruna Shanbaug

Friday, April 24, 2015

Years have gone; Yes! Decades have Gone. Leave alone the changes in life for all these days. Love for you still blooms like a fresh flower my dear. Needless to confess that Still I'm crazy about you. Love youuuuuuuuuuuu   ...........Sachin! Wish you a very Happy and Blessed Birthday. Many more Happy returns of the day. Happy Birthday Da!!!!



Tuesday, April 7, 2015

பிறகொரு சமயம் பார்த்துக் கொள்ளலாமென
சிறகு ஒடுக்கி கூட்டுக்குள் சிட்டுக்குருவி;
கூட்டுக் குருவியின் குரல் தேடி கரம்
நீட்டுகிறது வெயிலின் வெள்ளை நிழல்;
நிழலின் பாதையில் நீளும் மணலெங்கும்
அகழிக் கோட்டைக்குள் அவசர நண்டுகள்;
நடந்தறியா நண்டொன்றை கரை நோக்கி
நகர்த்துகிறது முகத்துவார நதியின் முதல் அலை;
அலையடித்துக் கொண்டே இருக்கிறது;
அனலடித்துக் கொண்டே இருக்கிறது;
அந்த விழாத முதல் துளியில்தான் இருக்கிறது
அடுத்த மழையின் முகவரிக் குறிப்பு;