Wednesday, July 22, 2015




நினைத்தாயோ?
நனைத்தாயோ?
விடாமல் தூறிக் கொண்டே
இருக்கிறது வானம்!

கரைந்தேனோ?
நனைந்தேனோ?
நில்லாமல் ஓடிக் கொண்டே
இருக்கிறது மேகம்!

உன் பாடல்களுக்கும்
என் தேடல்களுக்கும்
சேர்த்துதான் இதழ்கள்
பூத்திருக்கின்றன எனினும்
இமைகளுக்குள் இன்னும்
இடையறாத கண்ணாமூச்சி!

கடக்கும் ஒவ்வொரு முறையும்
கவனமாய் நினைத்துக் கொள்கிறேன்!
கண்ணனுக்கும் எனக்கும்
என்ன உறவென்று?

ராதைக்கும் சீதைக்கும்
கோதைக்கும் அந்த 
அவதார புருக்ஷனுடன்
என்ன உறவோ?
அதுவே! அதுவே! என்று
அசரீரி கேட்கிறது!!!

நம்ப மறுக்கும் மனதிற்குள்
நான் மீண்டும் மீண்டும்
கேட்டுக் கொண்டிருக்கிறேன்!
அதுவா? அதுவா?
அதுதானா என்று!

அசரீரி ஒருபுறம் இருக்கட்டும்;
சரி!சரி! கண்ணா!
நீயே சொல்லிவிடேன்!
நமக்குள் என்னதான் என்று!!!

No comments:

Post a Comment