Sunday, January 6, 2019

ஐயன் அழைத்தாலன்றி
அவனைக் காண
முடியாதெனில்,
அவன் அழைத்தே
அச்சகோதரிகளின் சன்னிதான
நுழைவு நடந்தது.
அப்படித்தானே!

அவன் அனுமதியன்றி
அவன் அழைப்பின்றி
அணுவும் அசையாது
எனில்
அவர்கள் வரவால்
அரிஅரசுதனுக்கு மட்டற்ற
மகிழ்ச்சி தான்.
அத்தனை தடைகள் தாண்டி
அவர்கள் அவனை தரிசித்த தில்
அய்யப்பனுக்கு அவ்வளவும்
மகிழ்ச்சி தான்!

ஆண்டாண்டு காலமாய்
தன்னைத் தரிசிக்க வரும்
ஆண்கள் ஒவ்வொருவரின்
வீட்டிலும்
அத்தனை நாட்களும்
விரதம் இருக்கும்
அக்காக்களையும்,
தங்கைகளையும்,
அவன் தாய் வயதுடைய
அன்னைகளையும்
அவன் அறிவான்
எனில்,
அவன் அழைத்தே
அவன் அக்காவும், அம்மாவும்
அத்தனை எதிர்ப்புகளுக்கு நடுவில்
அவனை சந்தித்திருக்கிறார்கள்!
சரிதானே!

நீங்கள் மனதாலும்
உடலாலும் செய்த
சகல பிழைகளையும்
மன்னித்துக் கொண்டிருக்கும்
பதினெட்டாம் படி அரசன்,
பாதுகாப்புக்காய் வைத்ததொரு
பத்தாம்பசலி பழக்கத்தைப்
பற்ரிக் கொண்டிருக்கும்
உங்கள் அறியாமை
ஆச்சாரங்களை உடைக்கவே,
ஒரு மனிதிச் சுவரின் பின்
இரு மகள்களைத்
த்ன்னைப் பார்ர்க்க
அழைத்திருக்கிறார் என்று
வைத்துக் கொள்ளுஙகளேன்!

மற்றபடி
பிந்து,
கனகதுர்கா,
என்ற
பெயரில் என்ன இருக்கிறது?
ஐயன் ஐயப்பன் அழைத்தே
அவர்கள் சன்னிதி
நுழைந்தார்கள் எனில்
பெயரில் என்ன இருக்கிறது?
ஆண், பெண்
என்ற
அனர்த்தங்களில் தான்
என்ன இருக்கிறது?
சாமி சரணம்!

No comments:

Post a Comment